logo
home ஆன்மீகம் செப்டம்பர் 02, 2016
நம் அறிவுக்கும், சக்திக்கும் அப்பாற்பட்ட பல விஷயங்கள் இருக்கின்றன என்பதை உணர வைக்கும் சனிபகவான்
article image

நிறம்

நவகிரகங்களில் சனி கிரகம் பலமான சக்திபெற்ற கிரகம் மட்டுமல்ல, ஒரு ராசியில் அதிக காலம்- இரண்டரை வருடம் தங்கிப் பலன் செய்யும் கிரகமுமாகும். அதனால் அவருக்கு மந்தன் என்றும் முடவன் என்றும் பல பெயர்கள் உண்டு.ஒரு ராசியில் இரண்டரை வருடம் என்ற விகிதத்தில் 12 ராசிளையும் (ராசி மண்டலத்தை) ஒருமுறை சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் ஆகும். அந்த முப்பது ஆண்டுகளில் பொதுவாக மனித வாழ்க்கையிலும்,நாட்டிலும், தொழில்துறை என எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு மாற்றம் ஏற்படுவது இயல்பு. அதனால்தான் முப்பது வருடத்துக்குமேல் சேர்ந்தாற்போல் யோகத்திலே திளைத்தவர்களும்இல்லை; கஷ்டத்திலேயே இளைத்தவர்களும் இல்லை என்பார்கள். 
சனீஸ்வரனைப்போல்கொடுப்பவரும் இல்லை கெடுப்பவரும் இல்லை என்பதும் சோதிடப் பழமொழி.ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டகச்சனி என்பன சனீஸ்வரனின் சஞ்சாரத்தினால் (கோசரநிலை) ஏற்படுவனவாகும்.
சனி மகா தெசை பிறப்பில் இருந்து கணிக்கப்பெறுவதாகும்.அவரவர் ராசிசக்கரத்தில்(சந்திரன் நிற்கும் இடம் ”ராசி” எனப்படும். அதற்கு) 12-ஆம் இடத்தில் சனி வரும்போது ஏழரைச் சனியின் முதல் கட்டம் ஆரம்பமாகின்றது.அங்கு இரண்டரை வருடம் சஞ்சரிக்கும் சனியை “விரயச் சனி” எனவும். அடுத்து ஜென்ம ராசியில் இரண்டரை வருடம் 2-ஆம் கட்டமாக சஞ்சரிக்கும் சனியை “ஜென்மச் சனி” என அழைப்பர். அதன் பின் ஜென்ம ராசிக்கு 2-ஆமிடத்தில் சனி சஞ்சரிக்கும் இரண்டரை வருட மூன்றாம் கட்டச் சனியை “பாதச் சனி” என்றும் குடும்பச் சனி, வாக்குச் சனி எனவும் அழைப்பர். 
இப்படி மூன்று கட்டமாக வரும் சனியின் மொத்த காலம்தான் ஏழரைச் சனியின் காலம் எனப்படும்.ஒருவருடை வாழ்நாளில் சிறு வயதில் வரும் முதல் சுற்றை (7.5 ஆண்டு) “மங்கு சனி” என்றும், வாலிப மற்றும் மத்திம வயதின்போது வரும் இரண்டாம் சுற்றை (7.5 ஆண்டு) “பொங்கு சனி” என்றும், கொஞ்சம் வயதான காலத்தில் வரும் மூன்றாம் சுற்றை (7.5 ஆண்டு) “மாரகச் சனி” அல்லது “மரணச் சனி” என்றும் அழைப்பர்.
இவற்றை விட அவரவர் ராசியில் இருந்து எட்டாவது இராசியில் சனீஸ்வரன் கோசரமாக சஞ்சரிக்கும் இரண்டரை வருட காலம் “அட்டமத்து சனி” என்றும்; ஏழாம் இடத்தில் சஞ்சரிக்கும் இரண்டரை வருட காலத்தை “கண்டச்சனி” என்றும்; நாலாம் ராசியில் சனீஸ்வரன் சஞ்சரிக்கும் இரண்டரை வருட காலம் அர்த்தாஷ்டகச்சனி (அரை அட்டமச் சனி) என்றும் அழைக்கப்பெறும்.இக் காலங்களும் சோதனை, வேதனை மிக்கதாகவே அமையும்பிறந்ததிலிருந்து முப்பது வயதுக்குள் ஏற்படும்.
ஏழரைச்சனியினால் ஏற்படும் தாக்கம்:
“படிப்பில் கவனம் செலுத்தவில்லை, காதல், கவன சிதறல், உறவினர்கள் மரணம், வேலையில்லா திண்டாட்டம்” என்பதுபோல பலவிதத்தில் பாதிப்புகள் இருக்கும். குழந்தைப் பருவம் முதல் டீன் ஏஜ்வரையிலான இந்த சுற்றில் பெற்றோருக்குள் கருத்து மோதல், பிரிவு, சந்தேகத்தால் சண்டை என்று பிரச்னைகள் வந்து நீங்கும்.பன்னிரெண்டு வயதிற்கு மேல் சனிப்பிடித்தால்குழந்தையின் கவனம் சிதறும். சரியான கவனத்தைப் படிப்பில் செலுத்தாது. Drop out from School கேசாகிவிடும். பத்து, ப்ளஸ் டூ வகுப்பில் பெயிலாகும் குழந்தைகளில் பெரும்பாலோனருக்கு ஏழரைச் சனி நடந்து கொண்டிருக்கும்.. சிலருக்கு படிப்பு, மற்றும் வித்தைக்குரிய கிரகமான புதன் ஜாதகத்தில் பலவீனமாக இருந்து அதனால்அவர்கள் தோல்வியுற நேரலாம். அவை விதிவிலக்கு.கணவன் - மனைவிக்குள் நேரடியாக எந்தப் பிரச்னையும் இருக்காது. மூன்றாவது நபர் தலையீட்டால்தான்பிரச்னை உருவாகும். குடும்பத்திற்குவழக்கமில்லாத உணவு வகைகளை குழந்தைகள் எடுத்துக் கொள்வார்கள். மந்தம், மறதி, தூக்கம் என்று இருப்பார்கள். 
ஏழரை சனியில் பெறும் அனுபவங்களும், அவமானங்களும், காயங்களும், வடுக்களும் வாழ்க்கை முழுதும் மறக்காதபடி இருக்கும். ‘‘இரண்டு மார்க் அதிகமாக எடுத்திருந்தால்தலையெழுத்தே மாறியிருக்கும்.இன்னும் கொஞ்சம் பொறுப்பா படிச்சுருக்கலாமே’’ என்று ரிசல்ட் வந்தபிறகு புலம்ப வைப்பார். இப்படி வருத்தப்பட வைத்தே வாழ்க்கையை வளர்ப்பார், சனி தர்மதேவன். அதர்மத்தில் திருப்பி விட்டு சோதிப்பார். வலையில் மாட்டாது வெளியேற வேண்டும்.
2வது சுற்று சனியை பொங்கு சனி என்று சொல்வார்கள். அவருடைய வேலையே இதுதான். அடிப்படைத் தேவைகளை‌ப் பூர்த்தி செய்வதுதான் இவர் வேலை. திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, மனை, வாகன வசதிகள் என எல்லாவற்றையும் 2வது சனியாக பொங்கு சனி கொடுப்பார். அதனால் தைரியமாக வாங்கலாம்.முப்பது வயதுக்கு மேல் யாருக்கு ஏழரைச் சனி நடந்தாலும் அதற்கு பொங்கு சனி என்று பெயர்.பறித்தல், பாதுகாத்தல், பலமடங்காக பெருக்கித் தருதல். இதுதான் இரண்டாவது சுற்றின் கான்செப்ட். உள்ளுக்குள் கிடந்த திறமைகளை பூவானம் போல பொங்க வைக்கும். செல்வத்தை அள்ளிக் கொடுக்கும். ஆனால், கொஞ்சம் கெடுக்கும். அதனால், கொடுத்துக் கெடுப்பவர்; கெடுத்து கொடுக்கிறவர் என்ற பெயர் சனிக்கு உண்டு.இந்த இரண்டாவது சுற்றின்போது சிலர், மிதமிஞ்சிய செல்வ வளத்தால் பிரச்னைகளை உருவாக்குவார்கள்.‘‘நான் யார் தெரியுமா?’’ என்று செல்வாக்கை நிரூபிக்கத் துணிவார்கள். தான்தான் பெரிய ஆள் என்று தன்னடக்கமற்ற மனோநிலையில் திரிவார்கள். அப்படி மாறிய அடுத்த நிமிடமே, ஆட்டம் காண வைக்கும் முயற்சியில் இறங்குவார் சனி. பழைய நிலைக்கே கொண்டு செல்லத் திட்டமிடுவார். ஆகவே, கவனமாக இருங்கள். பேச்சிலோ, செயலிலோ கர்வக் கொம்பு முளைத்தால் கொடுத்ததைப் பிடுங்க தயங்க மாட்டார். சனி பகவான் வந்தால்தான் நம் அறிவுக்கும், சக்திக்கும் அப்பாற்பட்ட பல விஷயங்கள் இருக்கின்றன என்பதை உணர்வோம். 
வசதி வரும்போது எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் கூழ் கிடைத்தாலும்குடியுங்கள். இந்த இரண்டாவது சுற்றில்தான் வியாபாரம் விருத்தியாகும்.அதனால் தைரியமாக தொழில் தொடங்கலாம். ‘‘ரெண்டாவது ரவுண்டுல ரெட்டிப்பு வருமானம்’’ என்றொரு வாக்கியம் உள்ளது. ஆனால் பாதை மாறினால், அதலபாதாளம்தான். அதேசமயம் நம்பிக்கை துரோகம் செய்தவர்களை பார்த்து துடிக்காதீர்கள். டென்ஷன் ஆகாதீர்கள். ஆரோக்கியம் பாதிக்கும். ஏழரை சனியில் யார் உங்கள் காசைசாப்பிட்டாலும்,அது ஏற்கனவே நீங்கள்பட்ட கடன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். சனிதிசை நடக்கும்போது கண்டிப்பாக திருநள்ளாறு தலத்திலும், திருவாரூர் - திருத்துறைப்பூண்டி பாதையிலுள்ள திருக்கொள்ளிக்காடு தலத்திலும் வீற்றிருக்கும் சனிபகவானை தரிசித்து வந்தால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
சனிக்கிழமைகளில்ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றி தொல்லைகளில் இருந்து விடுவிக்கும்படிமனமுருகவேண்டி வழிபடலாம்.சனி பகவானை திருப்தி படுத்த மாற்றுத் திறனாளிகள், (குறிப்பாக பார்வை இழந்தவர்கள், நடக்க இயலாதவர்கள்) வயதானவர், ஆதரவற்றவர்களுக்கு உதவலாம்.

குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் 
தினமும் புத்தம் புதிய செய்திகளுடன் வெளிவரும் ஒரே ஆன்மிக இணையதளம் 
                                            
www. aanmeegamalar.com 
எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com