logo
home ஆன்மீகம் செப்டம்பர் 17, 2017
புரட்டாசி மாதத்தை சைவமாதமாக ஆன்றோர்கள் மாற்றியதன் அற்புத காரணம்?
article image

நிறம்

புரட்டாசி மாதத்தை சைவ மாதமாக முன்னோர்கள் மாற்றியதற்கான அற்புதக் காரணங்கள் உள்ளன. புரட்டாசி மாதம் வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம். ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. பல மாதம் வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும். அதனால்தான் இந்த மாதத்தை சூட்டை கிளப்பிவிடும் மாதமாக புரட்டாசியை கூறுவார்கள். இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது. இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும். அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல் சளி தொந் தரவு அதிகரிக்கும். இதுபோன்ற சளி தொந்தரவை துளசி இலை கட்டுப்படுத்தும். இதற்காகவே புரட்டாசியில் விரதம் இருந்து (அசைவம் ஒதுக்கி) பெருமாள் கோவிலுக்கு போகும் வழக்கத்தை ஏற்படுத்தினர். மேலும் அந்த மாதத்தில் பெருமாள் கோவிலில் வழங்கப்படும் தீர்த்தமும் இயற்கை மருத்துவ குணத்துடன் தயாரிக்கப்படுவதால், துளசியும் தீர்த்தமும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வெகுவாக அளிக்க உதவும். இதுபோன்ற பல்வேறு நல்ல விஷயங்கள் மக்களுக்கு பயன்பட வேண்டும் என்ற காரணத்தால்தான் புரட்டாசி மாதத்தை பெருமாளுக்கு உகந்த மாதமாக மாற்றி, மக்களுக்கு நன்மை பயக்கும் விரத முறைகளை அனுசரிக்க முன்னோர்கள் வழிகாட்டினர். இந்தமாதத்தில் சைவ உணவை மட்டும் சாப்பிட்டால் பல்வேறு நோய்களி லிருந்து மக்கள் காப்பாற்றப்படுவார்கள் என்ற நோக்கத் தில்தான் புரட்டாசியில் அசைவத்தை தவிர்த்தனர் நம் முன்னோர்கள். நாமும் இந்த மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறையை கடைப்பிடித்து உடலையும், மனதையும் காத்துக்கொள்வோம் வாருங்கள்.