logo
home ஆன்மீகம் பிப்ரவரி 03, 2018
கோவிலுக்குச் செல்லும்போது அவசியம் கடைபிடிக்கவேண்டிய முக்கிய விதிகள்
article image

நிறம்

நாம் கோயிலுக்கு செல்லும் போது எந்தெந்த காரியத்தை செய்யலாம். எந்தெந்த காரியத்தை செய்யக்கூடாது என்பதைப் பார்ப்போம். • குளிக்காமல் கோவிலுக்கு செல்லக்கூடாது. • கர்ப்ப கிரகத்தினுள் கடவுளுக்கு அலங்காரம் நடக்கும் போது திரையிட்டு இருப்பார்கள். அச்சமயம் வழிபடுதல் கூடாது. கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டக்கூடாது. • சுவாமிக்கும், பலிபீடத்திற்கும் குறுக்கே செல்லக்கூடாது. பலிபீடம், விக்ரஹம் ஆகியவற்றின் நிழலை மிதித்தல் கூடாது. • ஆலயத்தில் நண்பர்களையோ, பெரிய மனிதர்களையோ கண்டால் வணங்கக்கூடாது. இறைவனே மிகப் பெரியவன். அத்தகைய ஆலயத்தில் அனைவரும் சமம். மற்றவரின் காலில் விழுந்து வணங்கக்கூடாது. • விபூதி, குங்குமம், பிரசாதம் வாங்கி நெற்றியில் இட்டுக் கொண்டபின் மீதமானவற்றைக் கீழே கொட்டுதல் சுற்றுத் தூண்களில் தடவுதல் கூடாது. மீதமானவற்றை ஒரு தாளில் மடித்துச் சென்று வீட்டின் பூஜையறையில் வைத்துக் கொண்டு தினசரி இட்டுக் கொள்ளலாம். • பிரசாதங்களை ஒருவருக்கொருவர் இட்டுக் கொள்ளுதலும் கூடாது. கோவிலுக்குள்ளேயோ, கோயில் மதிற்புறங்களிலோ எச்சில் துப்புதல், ஜலம் கழித்தல் கூடவே கூடாது. • விபூதி, சந்தன அபிஷேகம், பால் அபிஷேகம் தவிர சுவாமிக்கு இதர திருமஞ்சனம் ஆகும்போது பார்க்க கூடாது. அபிஷேகம் நடக்கும் பொழுது கோவிலைச் சுற்றி வரக்கூடாது. • கோவிலில் உள்ள திருவிளக்குகளை கையால் தூண்டவோ, தூண்டிய கையை சுவரில் துடைக்கவோ கூடாது. மீதியிருக்கும் எண்ணெய்யை தலையில் தடவிக் கொள்ளக்கூடாது. • சுவாமிகளை தொடுவது, சுவாமிகளின் திருவடிக்கடியில் கற்பூரம் ஏற்றுதல் கூடாது. • ஆண்கள் சட்டை அணிந்து செல்வதை தவிர்ப்பது நல்லது. லுங்கி அணிந்து செல்லுதல் கூடாது. அதிக அழுத்தமான வண்ண உடை ஆடம்பரமான உடை அணிந்து செல்லக் கூடாது. இது மற்றோரின் கவனத்தைத் திசை திருப்பிவிடும். தலையில் துணி, தொப்பி அணியக்கூடாது. • கோவிலை வேகமாக வலம் வருதல் கூடாது. அடிமேல் அடி வைத்து வலம் வரவேண்டும். மிக நிதானமாக அனைத்து மூர்த்திகளையும் வணங்கிச் செல்ல வேண்டும். • எவருடனும் உலக விஷயங்கள், குடும்ப விஷயங்கள் பேசிக்கொண்டு கோவில்களில் வலம் வரக்கூடாது. ஆலயத்தினுள் தெய்வசக்தி நிரம்பியிருக்கும். அச்சக்தி நம் உடலில் ஊடுருவும்படி இறைவனையே மனம் முழுக்க நிரம்பி வலம் வருதல் வேண்டும். • போதை வஸ்துக்கள், தின்பண்டங்கள் வாயில் வைத்துக் கொண்டு ஆலயத்தினுள் பிரவேசிக்கக் கூடாது. கோவிலுக்குச் சென்று திரும்பிய உடன் கால்களை கழுவக்கூடாது. • புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது. • சிவபெருமான் கோவில்களில் கடவுளை வணங்கிய பின் சிறிது நேரம் அமர்ந்து வரவேண்டும். பெருமாள் கோவில்களில் அமரக்கூடாது.