logo
home ஆன்மீகம் பிப்ரவரி 08, 2020
தைப்பூசத்திருநாள் முருகனுக்கு மட்டுமல்ல சிவனுக்கும் உகந்த நாள்
article image

நிறம்

இப்பூமியில் சக்தியின் வெளிப்பாடும், தெய்வீகமும் பொருந்திய காலம் தை மாதம் ஆகும். இம்மாதத்தில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வருகிறது. இந்த தைப்பூச தினத்தை அருட்பெருஞ்சோதி சித்திக்குரிய தினம் தேவர்களின் விருப்பத்திற்கேற்ப அருள் மிகு நடராசர், தன் சக்தியுடன் திரு நடன காட் சியை காட்டிய நாள். எனவே சிவாலயங் களில் விழாக்கோலம். குறிப்பாக சிதம்பரத்தில் மிக விசேஷம். தை மாதப் பூச நட்சத்திரத்தில் வரும் உற்சவம் மிக முக்கியமாய்க் கருதப்படுகிறது. ஆடல்வல்லான் தன் ஆனந்தத் தாண்டவத்தைச் சித் சபையில் இந்த பூசத்தில் நடத்தியதாய்ச் சொல்லப்படுகிறது. இந்தத் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக, பதஞ்சலி, வியாக்ரபாதர் இருவருக்கும் இறைவன் தன் நாட்டியத்தைக் காட்டி முக்தி கொடுத்ததாய்க் கூறப்படுகிறது. முதன் முதல் தில்லைப் பதியில் "கனகசபை" அமைத்து இறைவன் ஆனந்தத் தாண்டவம் ஆடியதும் தைப்பூச நன்னாளில் தான் என்று சொல்லப்படுகிறது. சிவனுக்கே உரிய "சூல விரதம்" அன்று சிறப்பித்துச் சொல்லப் பட்டாலும், அது தற்சமயம் அவர்தம் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய சிவனின் அம்சம் ஆன சுப்ரமணியருக்கு உரிய நாளாக மாறி இருக்கிறது. அன்று இறை அவனுக்கு அன்னப் பாவாடை சார்த்திப் பின்னர் அது பக்தர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படும். குறிப்பாக சிதம்பரத்தில் மிக விசேஷம் சிதம் பரத்தில் சிவகங்கை குளத்திலே, தீர்த்தவாரிக்கு பிறகு, இறைவன் உலா வரும் நிகழ்வு. பின் அன்னப் பாவடை என அளவில்லா அன்னம் இறைவனுக்கு படைத்தபின் வந்த பக்தர்களுக்கு வாரி வரி வழங்குதல் நடை பெறும். இந்த தினத்தில்தான் முருகன் வள்ளியை மணந்த நாள், எனவே திருத்தணியில் இன்று மணக்கோலத்துடன் காட்சி தருவார். பழனி யிலோ சுமார் ஒரு வாரமாக பக்தர்களின் நடை பயணம் நடக்கும். இந்த பாத யாத்திரை தற் போது ஆண்டுக்கு ஆண்டு பெருகி வருகிறது. பழனிசாலையெங்கும் சாரை சாரையாக மக்கள் பழனி முருகனை வேண்டிக் கொண்டு நடப்பதும், கேரளா போன்ற வெளி மாநில மக்கள் முருகனை நாடி வருவதும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். 27 நட்சத்திரங்களில் பூசம் நட்சத்திரத்தின் அதி தேவதையாக நவகிரகங்களில் சுப கிரகமாக குரு பகவான் இருக்கிறார். தந்தையான சிவபெருமானுக்கு அவரின் மகன் முருகன் பிரணவ மந்திர பொருளை உபதேசித்து சிவகுருநாதன் என்கிற பெயரை பெற்று குரு ஸ்தானம் பெற்றார். எனவே இந்த தினத்தில் முருகப்பெருமானை வணங்குபவர்களுக்கு முருகன் மற்றும் குரு பகவானின் அருள் கிடைத்து, தொட்டே காரியங்கள் அனைத்து பொன்னாகும் அற்புதம் ஏற்படும். திருமண சம்பந்த பேச்சு, புதிய தொழில் வியாபார ஒப்பந்தங்கள் போன்றவற்றை இந்த தை பூச நன்னாளில் சிவபெருமான், முருகனை வணங்கி தொடங்கினால் அவை நிச்சயமான வெற்றி பெற்று நன்மைகளை தரும். இந்த தை பூச நாளில்தான் வள்ளியை முருகன் மணமுடித்ததாக கூறப்படுகிறது. சிவ விரதம் தை பூசம் தினத்தன்று அதிகாலை எழுந்து குளித்து முடித்ததும், சிவபெருமானை மனதில் நினைத்தவாறு நெற்றியில் விபூதி பூசிக்கொண்டு, ருத்ராட்சம் அணிந்து, தேவாரம், திருவாசகம் போன்றவற்றை படித்து சிவபெருமானை வழிபடுவது சாலச் சிறந்ததாகும். முருகனுக்கு விரதம் தை பூச தினத்தில் முருகனை வழிபட விரும்புபவர்கள் காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உட்கொள்ளாமல் விரதம் மேற் கொள்ள வேண்டும். அல்லது பால், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம். முருகனுக்கு பால் குடம் எடுத்தல், காவடி சுமந்து செல்லுதல், அழகு குத்தி கொள்ளுதல் போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்த விரும்புபவர்கள் செலுத்தலாம். பின்பு மாலையில் முருகன் கோயிலுக்கு சென்று முருகனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இத்தகு பெருமை படைத்த நாளிலே வடலூரில், அருள் பெறும் ஜோதி வள்ளல்அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது. சபையின் தெற்கு வாசல் வழியாக உள்ளே சென்றால் வலது புறம் பொற்சபையும், இடது புறம் சிற்சபையும் உள்ளன. இவைகளுக்கு மத்தியில் பஞ்சபூத தத்துவங்களை குறிக்கும் 5 படிகளை கடந்து உள்ளே சென்றால் சதுரபீடத்தில் வள்ளலார் ஏற்றி வைத்த தீபம் காணப்படும். அதன் முன் 6.9 அடி உயரம், 4.2 அடி அகலம் கொண்ட நிலைக்கண்ணாடி உள்ளது. கண்ணாடிக்கு முன்னால் கருப்பு, செம்மை என பல வண்ணங்களில் ஏழு திரைகள் காணப்படும். இந்த திரைகளை நீக்கி, நிலைக்கண்ணாடிக்கு பின் உள்ள தீபத்தை தரிசிப்பதே ஜோதி தரிசனம் இதை உலகுக்கு உணர்த்தவே வள்ளலார் ஜோதியில் ஐக்கியமானதாகவும் கூறப்படுகிறது. இதில் நமது ஆயிரம் ஆயிரம் ஆண்டு அனுபவ அறிவு மட்டும் அனுபூதியில் பெற்ற மெய் அறிவும் சேர்ந்து, விண்மீன்கள் சேர்க்கை முதலியன ஆய்ந்து, மிகப் பெரும் வான் சாஸ்திர அறிவுடன், தை பூச தினத்தன்று இறைவழிபாடு செய்தல், மிக உகந்தது எனக் கண்டனர் . இதற்காக சில விழாக்களையும், ஆலயங்களில் அமைத்தனர் . இந்த நாளை மிகச் சிறந்த காரியங்களை தொடங்கவும் , இறை உணர்வில் ஆழ்ந்து இருக்கவும் பயன் படுத்திக் கொள்ளுமாறு நினைவுறுத்த விரும்புகிறேன். மனம் ஜீவனில் அடங்கி, ஜீவன் ஆன்மாவில் அடங்கி,ஆன்மா சிவத்துடன் கலந்து விடும், என்பதை காட்டவே தை பூசம்.