logo
home பலன்கள் மே 01, 2016
பிரச்சனைகளின் வகைகளும், அந்தப் பிரச்சனையை எளிதாக தீர்த்துவைக்கும் விரதங்களின் மகிமைகளும்
article image

நிறம்

சங்கடஹர சதுர்த்தி: தேவையற்று ஏற்படும் சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து மனதில் அமைதி நிலவும் விநாயக சதுர்த்தி: வாழ்வின் விக்னங்கள் அனைத்தும் தீர்ந்து விநாயகனின் பூரணமான அருள் கிட்டும் சிரவண விரதம்: குடும்பத்தில் அனைவரிடமும் ஒற்றுமை பெருகி. ஆனந்தமும், சந்தோஷமும் கிட்டும். வைகுண்ட ஏகாதசி: குடும்பத்தில் நிலவி வந்த வறுமைகள் அனைத்தும் நீங்கி, செல்வ வளம் கொழித்திடும் சஷ்டி விரதம்: மனதில் எண்ணிய காரியங்கள் அனைத்தும் இனிதே நிறைவேறும். புண்ணியம் தரும் கௌரி நோன்பு: குறையாத செல்வமும், நீண்ட ஆயுளும், நல் மனைவியும், குழந்தைகளும் கிடைக்கும். வரலெஷ்மி நோன்பு: மாங்கல்ய பாக்கியம் கிடைத்திடும். மணமான தம்பதியரிடையே நல் ஒற்றுமை நிலவும் பிரதோஷ விரதம்: மன அமைதி கிடைத்திடும், நீண்ட நல் ஆயுள் அமைந்திடும். செல்வ வளம் பெருகிடும் மகா சிவராத்திரி: சிவ பெருமானின் அருள் கிடைக்கும், வாழ்வில் அனைத்து நன்மைகளும் உண்டாகும் வைகாசி விசாகம்: நீண்ட நாட்களாக மக்கட்பேறு இல்லாதவர்கள் குழந்தைச் செல்வம் கிடைக்க பெறுவர் நவராத்திரி விரதம்: மன நலம், நீண்ட நல் ஆயுள், குன்றாத செல்வம் அனைத்தும் கிடைக்கப் பெறுவர் கோகுலாஷ்டமி விரதம்: மன நலம், நீண்ட நல் ஆயுள், குன்றாத செல்வம் அனைத்தும் கிடைக்கப் பெறுவர் அமாவாசை விரதம்: பித்ருக்களுக்கு செய்யும் தர்ப்பணத்தால், அவர்களது ஆசிகள் அனைத்தும் கிடைக்கும். பௌர்ணமி விரதம்: வாழ்வில் ஏற்பட்ட அனைத்து கஷ்டங்களும் விலகி, சுகமான வாழ்வு அமையும். கார்த்திகை விரதம்: எல்லாவிதமான நன்மைகளும் வந்தடையும். முருகனின் பரிபூரண ஆசி கிடைக்கும் குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் www.aanmeegamalr.com