logo
home பலன்கள் ஜூன் 25, 2016
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும்,உரிய மரத்தை நட்டால் பாவம் போய், வளம் உண்டாகும், விருட்ச சாஸ்த்திரம் கூறும் பரிகார முறைகள்
article image

நிறம்

நம்மை அறியாமல் நாம் செய்யும் பாவங்களை, பாவ கதிர்களை கிரகிக்கும் சக்தி விருட்சங்களுக்கு உண்டு.. உங்கள் நட்சத்திரத்துக்குரிய மரத்தை , நீங்களே உங்கள் கையால் நட்டு , நீரூற்றி வளர்த்து வாருங்கள்.. அந்த மரம் வளர , வளர உங்கள் வாழ்வும் வளம் பெறும். உங்கள் பாவக் கதிர்களை கிரகித்து , உங்களுக்கு அற்புதமான ஒரு ஆன்ம தொடர்பை இந்த மரங்கள் செய்யும்.

சில மரங்களை வீட்டில் வளர்க்க முடியாது.. உங்கள் கண் படும் இடங்களில் , உங்கள் தோட்டத்திலோ, சாலை ஓரங்களிலோ, இல்லை ஆன்மிக ஸ்தலங்களில் , ஒரு கோயில்சார்ந்த வனப்பகுதியில் (சதுரகிரி, திருஅண்ணாமலை, பழனி, திருப்பரங்குன்றம், பாபநாசம், குருவாயூர், திருப்பதி, திருத்தணி,சுவாமி மலை) தென்மேற்குப் பகுதியில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் நடவேண்டும்.அந்த மரக்கன்றையும் அவரது பிறந்த நட்சத்திரம் உதயமாகும் நாளில் நடுவது மிக நன்று.

மரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவதானியங்களை ஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டு ஊறிய நவதானியங்களையும் அந்த மரக்கன்றுக்கு உரமாகப்போட வேண்டும்.

இப்படிச் செய்த மறு விநாடிமுதல், அம்மரக்கன்று வளர,வளர அதை நட்சத்திரத்திற்குரியவரின் வாழ்க்கை மலரும்.அந்த மரக்கன்றை நட்டவரின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களையும் அந்த மரக்கன்று ஈர்த்துவிடும்.

அம்மரக்கன்று பூத்து,காய்க்கும்போது,உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாகத்துவங்கும்.அவரது கர்மவினைகள் நீங்கியிருக்கும்.கர்மவினைகளை வெற்றிகொள்ள ‘விருட்ச சாஸ்திரம்’ இப்படி ஒரு வழிகாட்டுகிறது.


இப்போது உங்களது பிறந்த நட்சத்திரத்துக்குரிய விருட்சம் எனப்படும் மரம் எதுவெனப் பார்ப்போம்:

அஸ்வினி:

1 ம் பாதம் - காஞ்சிதை (எட்டி), 2 ம் பாதம் - மகிழம், 3 ம் பாதம் - பாதாம், 4 ம் பாதம் - நண்டாஞ்சு


பரணி:

1 ம் பாதம் - அத்தி, 2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு, 3 ம் பாதம் - விளா, 4 ம் பாதம் - நந்தியாவட்டை

கார்த்திகை:

1 ம் பாதம் - நெல்லி, 2 ம் பாதம் - மணிபுங்கம், 3 ம் பாதம் - வெண் தேக்கு ,  ம் பாதம் - நிரிவேங்கை

ரோஹிணி:

1 ம் பாதம் - நாவல்,  2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை,  3 ம் பாதம் - மந்தாரை,  4 ம் பாதம் - நாகலிங்கம்

மிருகஷீரிஷம்: 

1 ம் பாதம் - கருங்காலி, 2 ம் பாதம் - ஆச்சா, 3 ம் பாதம் - வேம்பு, 4 ம் பாதம் - நீர்க்கடம்பு

திருவாதிரை:

1 ம் பாதம் - செங்கருங்காலி, 2 ம் பாதம் - வெள்ளை, 3 ம் பாதம் - வெள்ளெருக்கு, 4 ம் பாதம் - வெள்ளெருக்கு

புனர்பூசம்:

1 ம் பாதம் - மூங்கில், 2 ம் பாதம் - மலைவேம்பு, 3 ம் பாதம் - அடப்பமரம், 4 ம் பாதம் - நெல்லி

பூசம்:

1 ம் பாதம் - அரசு, 2 ம் பாதம் - ஆச்சா, 3 ம் பாதம் - இருள், 4 ம் பாதம் - நொச்சி

ஆயில்யம்

1 ம் பாதம் - புன்னை, 2 ம் பாதம் - முசுக்கட்டை, 3 ம் பாதம் - இலந்தை, 4 ம் பாதம் - பலா

மகம்:

1 ம் பாதம் - ஆலமரம், 2 ம் பாதம் - முத்திலா மரம், 3 ம் பாதம் - இலுப்பை, 4 ம் பாதம் - பவளமல்லி

பூரம்:

1 ம் பாதம் - பலா, 2 ம் பாதம் - வாகை, 3 ம் பாதம் - ருத்திராட்சம், 4 ம் பாதம் - பலா

உத்திரம்:

1 ம் பாதம் - ஆலசி, 2 ம் பாதம் - வாதநாராயணன், 3 ம் பாதம் - எட்டி, 4 ம் பாதம் - புங்கமரம்

ஹஸ்தம்:

1 ம் பாதம் - ஆத்தி, 2 ம் பாதம் - தென்னை, 3 ம் பாதம் - ஓதியன், 4 ம் பாதம் - புத்திரசீவி

சித்திரை:

1 ம் பாதம் - வில்வம், 2 ம் பாதம் - புரசு, 3 ம் பாதம் - கொடுக்காபுளி, 4 ம் பாதம் - தங்க அரளி

சுவாதி:

1 ம் பாதம் - மருது, 2 ம் பாதம் - புளி, 3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை, 4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை

விசாகம்:

1 ம் பாதம் - விளா, 2 ம் பாதம் - சிம்சுபா, 3 ம் பாதம் - பூவன், 4 ம் பாதம் - தூங்குமூஞ்சி

அனுஷம்:

1 ம் பாதம் - மகிழம், 2 ம் பாதம் - பூமருது, 3 ம் பாதம் - கொங்கு, 4 ம் பாதம் - தேக்கு

கேட்டை:

1 ம் பாதம் - பலா, 2 ம் பாதம் - பூவரசு, 3 ம் பாதம் - அரசு, 4 ம் பாதம் - வேம்பு

மூலம்

1 ம் பாதம் - மராமரம், 2 ம் பாதம் - பெரு, 3 ம் பாதம் - செண்பக மரம், 4 ம் பாதம் - ஆச்சா

பூராடம்

1 ம் பாதம் - வஞ்சி, 2 ம் பாதம் - கடற்கொஞ்சி, 3 ம் பாதம் - சந்தானம், 4 ம் பாதம் - எலுமிச்சை

உத்திராடம்:

1 ம் பாதம் - பலா, 2 ம் பாதம் - கடுக்காய், 3 ம் பாதம் - சாரப்பருப்பு, 4 ம் பாதம் - தாளை

திருவோணம்:

1 ம் பாதம் - வெள்ளெருக்கு, 2 ம் பாதம் - கருங்காலி, 3 ம் பாதம் - சிறுநாகப்பூ, 4 ம் பாதம் - பாக்கு

அவிட்டம்: 

1 ம் பாதம் - வன்னி, 2 ம் பாதம் - கருவேல், 3 ம் பாதம் - சீத்தா, 4 ம் பாதம் - ஜாதிக்காய்

சதயம்:

1 ம் பாதம் - கடம்பு, 2 ம் பாதம் - பரம்பை, 3 ம் பாதம் - ராம்சீதா, 4 ம் பாதம் - திலகமரம்

பூரட்டாதி:

1 ம் பாதம் - தேமா, 2 ம் பாதம் - குங்கிலியம், 3 ம் பாதம் - சுந்தரவேம்பு, 4 ம் பாதம் - கன்னிமந்தாரை

உத்திரட்டாதி:

1 ம் பாதம் - வேம்பு, 2 ம் பாதம் - குல்மோகர், 3 ம் பாதம் - சேராங்கொட்டை, 4 ம் பாதம் - செம்மரம்

ரேவதி:

1 ம் பாதம் - பனை, 2 ம் பாதம் - தங்க அரளி, 3 ம் பாதம் - செஞ்சந்தனம், 4 ம் பாதம் - மஞ்சபலா

தங்களுக்குரிய நட்சத்திரங்கள் , பாதங்கள் அறிந்து விருட்சங்கள் வளர்த்து , வளம் பெறுங்கள்..

மரங்களை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஸ்தல விருட்சங்கள் உண்டு. அந்த ஸ்தல விருட்சத்தின் அடியில், அருகில் நீங்கள் அமர்வது , நீங்கள் அந்த ஆலயத்தின் கருவறைக்குள் அமர்வதுக்கு ஒப்பானது. ஆலயத்தை சுற்றி இருக்கும் அருள் அலைகளை ஸ்தல விருட்சம் கிரகித்து வெளியிடுகிறது.

எந்த ஒரு ஜாதகருக்கும், சில சமயங்களில், கிரக நிலைக்கு ஏற்ப எத்தனையோ பரிகாரங்களை செய்த போதிலும், பலன்கள் உடனடியாக கிடைக்காமல் போனால், நீங்கள் தாராளமாக இந்த விருட்சங்களை பரிந்துரைக்கலாம்.


குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் 

தினமும் புத்தம் புதிய செய்திகளுடன் வெளிவரும் ஒரே ஆன்மிக இணையதளம் 
                  

www. aanmeegamalar.com 

எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com