logo
home ஆன்மீகம் ஏப்ரல் 27, 2018
பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இந்துக்கள் பயன்படுத்திய விமானம், கம்பர் உவமையில் வெளிவந்த உண்மை
article image

நிறம்

இந்துக்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே விமானத்தை பயன்படுத்தியுள்ளனர். ஒரு விமானம் எவ்வாறு மேலெழும்ப வேண்டும், எவ்வாறு தரையிறங்க வேண்டும் என்பவற்றை மிகவும் தெளிவாக கூறியுள்ளனர் நமது முன்னோர். உதாரணத்திற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னரே, வானூர்தி எப்படி பறக்க வேண்டும் என்று கம்பர் தன் கம்பராமயணத்தில்குறித்து இருக்கிறார். இது உண்மையில் வியப்பான ஒன்று தான். ஏனென்றால் ஆரம்பத்தில் மேலை நாடுகளில் வானூர்திகள் உருவாக்கப்பட்ட போது, அதை எப்படி பறக்க வைப்பது என்று தெரியாமல் நிறைய பேர் மாண்டு போனர். சிலர், மலைகளின் உச்சியில் ஏறி அங்கிருந்து குதித்து பறக்க வைக்க முயன்றனர். ஆனால், 1000 ஆண்டுகளுக்கு முன்னர் வானூர்தி எப்படி பறக்க வேண்டும் என்று கம்பர் குறித்திருக்கிறார். “மண்ணின் மேல்அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்துவிண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்தபுண்ணில் ஊடுஒரு வெல்என மனம்மிகப் புழுங்கிஎண்ணி நாம்இனிச் செய்வது என்ன இளவலே” கம்பராமாயணத்தில் வரும் ஒரு ஒரு காட்சிதான் இது இதன் விளக்கம்.... இராவணன் விமானத்திலே சீதையைக் கவர்ந்து போய்விட்டான். இராமரும் தம்பியும் தேடிப் போகிறார்கள். இராவணனின் விமானச் சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிகிறது. அதைப் பின்பற்றிச் செல்கிறார்கள். ஆனால் போகப் போக தெளிவாகத் தெரிந்த சக்கரச் சுவடுகள்தெளிவில்லாமல் ஆகிவிடுகின்றன. மண்ணிலே பட்டும் படாமலும் தெரிகின்றன. ஒருகட்டத்துக்குமேல் விமானத்தின் சுவடுகளே இல்லை. ஆம்! விமானம் ஓடுபாதையில் ஓடி வானத்தில் எழுந்து போய்விட்டது. எவ்வளவு துல்லியமாக விளக்கி இருக்கிறார் என்று பாருங்கள். வானூர்திகள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீர்ப்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்ற விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படித் தெரிந்து இருந்தது. வானூர்தி பறப்பதை நேரில் கண்டாரா? இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா? அப்படியென்றால்,தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் வானூர்திகளை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா?| மேற்கண்டவை அனைத்தும் நமது இந்து அரசர்கள் ஆதிகாலத்திலேயே விமானத்தை பயன்படுத்தியதை நேரில் பார்த்த அனுபவ அறிவாக இருந்திருக்கிறது. இதை கம்பர் மிகவும் நயம்பட அருமையாக தனது கவித்திறன் மூலம் வெளிப்படுத்தியதை பார்க்கும்போது, நமது இந்து மதம் அறிவியலும் ஆன்மீகமும் கலந்தது தான் என்பது வியப்பின் உச்சம்.