logo
home ஆன்மீகம் ஜூலை 03, 2016
முருகனுக்கு உகந்த காவடியின் வரலாறும், காவடி எடுப்பதால் ஏற்படும் நன்மைகளும்
article image

நிறம்

அகஸ்திய முனிவரின் சீடர்களில் ஒருவரான இடும்பனை அழைத்து , தமது வழிப்பாட்டிற்காக கயிலை சென்று அங்கு முருகனுக்கான கந்த மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனும் இரு சிகரங்களையும் கொண்டு வரும்படி கூறினார்.  

அகஸ்தியரின் கட்டளைக்கிணங்க இடும்பனும் கயிலைச் சென்று அவ்விரு மலைகளையும் இருபுறமும் தொங்க , காவடியாக கட்டி எடுத்துக் கொண்டு வந்தான்.  முருகன் இவ்விரு கிரிகளையும் திருவாவினன் குடியில் நிலைப் பெற செய்யவும்; இடும்பனுக்கு அருளவும் விரும்பி ஒரு திருவிளையாடளை நிகழ்தினார்.  
இடும்பன் வழி தெரியாமல் திகைத்த போது ,  முருகன் குதிரை மேல் செல்லும் அரசனைப் போல் தோன்றி இடும்பனை ஆவினன்குடிக்கு அழைத்து வந்து  சற்று ஓய்வெடுத்து செல்லும்படி கூறினார். இடும்பனும் காவடியை இறக்கி ஓய்வெடுத்து விட்டு புறப்படும் போது காவடியை தூக்க முடியாமல் தின்டாடினான்.  ஏன் இப்படி காவடியை தூக்க முடியாமல் போனது என்று சுற்றி பார்க்கும் போது சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவணாண்டியாய் கையில் தண்டுடன் நிற்பதை கண்டான்.  

இடும்பனும் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான்.  ஆனால் அந்த சிறுவன் அந்த மலை தனக்கே சொந்தம் என்று கொண்டாட ; கோபமுற்ற இடும்பன் அச்சிறுவனை தாக்க முயன்றான்.  அப்போது இடும்பன் வேரற்ற மரம் போல் கீழே சரிந்து விழுந்தான்.  

இதை கண்ட அகஸ்தியர் மற்றும் இடும்பனின் மனைவியும் சென்று வேண்ட , முருகனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனை தனது காவல் தெய்வமாகவும் நியமித்தார்.  அப்போது முருகன் இடும்பன் போல் காவடியேந்தி சந்தனம் , பால் , மலர் போன்ற அபிஷேகப் பொருட்களை தன் சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கு அருள் பாலிப்பதாக வாக்களித்தார்.  அப்போது முதல்  முருகனுக்கு இந்த காவடி எடுக்கும் பழக்கம் வழக்கமாகி விட்டது. 


காவடி எடுப்பதன் தத்துவம் ?

ஒவ்வொரு மனிதனுக்கும் இன்பமும் , துன்பமும் இரண்டு சுமைகளாக சரி சமமாக இருக்கிறது.  மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இந்த இரண்டு சுமைகளையும் தாங்கிதான் ஆக வேண்டும்.  இதற்கு கடவுள் பக்தி எனும் ஆன்மீக எண்ணம் இந்த இரண்டு சுமைகளையும் எளிமையாக சுமக்க உதவும் மையக் கோலாக உள்ளது என்பது மட்டுமே உண்மை. அதுமட்டுமல்லாமல் , தைப்பூசத்திற்கு காவடி எடுப்போர்கள் காவடி எடுப்பதற்கு முன் இடும்பனை வழி துணையாக வரும்படியும் , எடுத்த பின் இடும்பனுக்கு நன்றி கூறும் வகையிலும் அவருக்கு விசேஷ பூஜைகள் செய்வது வழக்கம்.