logo
home ஆன்மீகம் ஏப்ரல் 28, 2016
எந்த கணபதியை, எந்த முறையில் வணங்கினால் என்ன பலன் கிடைக்கும்
article image

நிறம்

1.அரச மரத்தடி விநாயகரை வணங்கினால் குழந்தைப்பேறு விரைவில் உண்டாகும். 2.வன்னி மரத்தடி விநாயகர், கிரஹ தோஷங்கள் விலக்குவார். 3.ஆலமரத்தடி விநாயகரை வழிபடுவதால் சூன்யங்கள் அகலும். 4.வேப்பமர விநாயகர் அருளால் தீராத, நாட்பட்ட நோய்கள் மறையும். 5.ஆலயங்களில் உள்ள கோஷ்ட விநாயகரை வணங்க, அனைத்து தெய்வங்களின் திருவருளும் கிடைக்கும். 6.நாவல் மரத்தடி விநாயகரை வழிபடுவதால் பிள்ளைகளுக்கு அறிவு வளரும். 7.நடன கணபதி, கலைகளில் சிறந்து விளங்கச் செய்வார். 8.ஆற்றங்கரை விநாயகர், பாவங்களை எளிதாகக் கரைத்துவிடுவார். 9.ஸ்ரீதோரண கணபதி,(சிவாலயங்களில் அம்மன் சந்நிதானத்தின் பக்கவாட்டிலும் முருகன் சந்நதி முகப்புகளிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் கணபதி மூர்த்தங்கள், சக்தி வாய்ந்தவை. இந்த மூர்த்தங்களில் தோரண வாயில்களுக்கு நேராக அமர்ந்திருப்பவர் தோரண கணபதி எனப்படுகிறார்.) தன்னை நாடி வருபவர்களுக்குக் கடன் தொல்லை தீர்ந்திட அருள்பாலிக்கிறார். அவசியம் இருப்பின் குறித்த காரியம் நிறைவேற, இவ்வாறு ஒவ்வொரு பலனுக்கும் உள்ள ஒவ்வொரு கணபதியை வணங்கிவந்தால் நல்ல பலன் கிடைக்கும், பொதுவாக எல்லா கணபதியும் எல்லா நாட்களிலும் வழங்கினால் பொதுவான அனைத்து பலனையும் வழங்கி அருளுவார் முதன் முதல் கடவுள். குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் www.aanmeegamalr.com