பாக்ய ஸ்தனாதிபதி குருவும் ஜீவன லாப ஸ்தானாதிபதி சனிபகவானும் சேர்ந்து நீச்ச பங்க ராஜயோகம் தருகிறார்கள். யாருடனும் பகை வேண்டாம். கோபம் / வேகம் தவிர்க்கவும். உடல்நலத்தில் அக்கரையுடன் இருக்கவும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். உடன் பிறந்த வர்களுடன் அனுசரித்து போகவும். வாகனத்தில் கவனம் கணவன் / மனைவி அனுசரித்து போக வும், உடல்நலம் பாதித்தவர்கள். இந்த மாதம் மிகவும் கவனமாக இருக்கவும்.
ரிஷபம்: பாக்ய ஸ்தானாதிபதி சனி பகவான் ஆட்சி பெற்றும், சுக்கிரன், புதன் பாக்ய ஸ்தானத்தில் இருப்பதும் நல்லது. கணவன், மனைவி ஒற்றுமை அவசியம் தேவை. திருமண தடை அகலும். உத்யோகத்தில் பதவி உயர்வு ஊதிய உயர்வு அமையும். வேலையில்லாதபட்டதாரிகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டில் விரும்பிய பிரகாரம் நல்ல வேலை கிடைக்கும்.
செவ்வாய் வலுவாக உள்ளது. குருபகவான் நீச்சம் பெற்று சனிபகவான் ஆட்சி பெற்று நீச்ச பங்க ராஜ யோகம் தருகிறார். உத்யோகத்தில் கவனமாக இருக்கவும் வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் கவனமாக இருக்கவும். பிரிந்து உள்ள கணவன், மனைவி கருத்து வேறுபாடு இல்லாமல் சேர்ந்து இருக்க வழி செய்யவும். தேவை இல்லாத இரவு பயணத்தை தவிர்க்கவும். வியாபாரிகள் கவனமாக இருக்கவும்.
செவ்வாய் ஆட்சி பெற்று சிறப்பாக உள்ளார். குரு நீச்சம் பெற்று நீச்சபங்க ராஜ யோகம் தருகிறார். தடைப்பட்ட அனைத்து காரியங் களும் தடையின்றி நடக்கும். உத்யோகத்தில் உயர் பதவியில் உள்ளவர்கள் சிறப்பு அந்தஸ்தை பெறுவார்கள். சிலருக்கு பெரிய பதவி தேடி வரும். குழந்தை மேல் அதிக கவனம் தேவை. விஷ ஜந்துக்களிடம் கவனமாக இருக்கவும். யாருடனும் கருத்துவேறுபாடு கூடாது.
அதிபதி சனி பகவானும் 4, 9ம் அதிபதி செவ்வாயும் ஆட்சி பெற்ற தாக 5, 8ஆம் அதிபதி குரு நீச்சம் பெற்று நீச்ச பங்க ராஜ யோகம் தருகிறார். செய்தொழிலில் கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம்தேவை. அப்பா, அம்மா உடல் நலத்தில் அதிக அக்கரைதேவை. வேலையில் இருப்பவர்கள் தன் வேலையில் கவனமாக அவசியம். சிலரின் உடல் நலம் அதிகம் பாதித்த தாயார் மோட்சம் அடைவார்கள்.
குருநீச்சம் பெற்று, 5, 6ம் அதிபதி சனிபகவான் நீச்சம் பெற்று நீச்ச பங்க ராஜயோகம் தருகிறார். தாய் தந்தையின் உடல் தருகிறார். தாய், தந்தையின் உடல் நலத்தில் அதிக அக்கரை தேவை. உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு கூடாது. உடல்நலம் சீராகும். கணவனின் உத்யோக உயர்வு சிறப்பாக நடக் கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு செய்தி வரும். குழந்தைகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இந்த மாதம் சிறப்பாக இருக்கும்.
செவ்வாய் 4, 5ஆம் அதிபதி சனி பகவானும் ஆட்சிபெற்று சிறப்பாக உள்ளனர். தேவையில் லாத வாக்கு வாதம், தன பரிவர்த் தனை தவிர்க்கவும். கடன் கொடுக்க வாங்க வேண்டாம். வாகனத்தில் கவனமாக இருக்கவும். குழந்தை இல்லாத சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். சிலருக்கு தடைப்பட்ட திருமணம் நடக்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். எதிலும் கவனமாக இருப்பின் பிரச்சனை இல்லை.
ராசி அதிபதி செவ்வாய் ஆட்சி பெற்றதும் 3, 4ம் அதிபதி 3ல் ஆட்சி பெற்றதும் மிக மிக சிறப்பாகும். 3ஆம் அதிபதி 3ல் வந்தால் ராஜ யோகமாகும். தடைப்பட்ட காரியங்கள் தடையின்றி நடக் கும். வேலையில் நல்ல மாற்றம் வரும். இருதய கோளாறு உள்ளவர்களை நன்றாக கவனித்துக் கொள்ளவும். நல்ல அதிக அக்கறை தேவை. கணவன், மனைவி ஒற்றுமை அவசியம் தேவை.
பூர்வ புண்ணிய ஸ்தனாதிபதி அங்கா ரகன் ஆட்சி பெற்றதும் 2, 3ம் அதிபதி சனிபகவான் ஆட்சி பெற்றதும் ராசி நாதன் நீச்ச பங்க ராஜ யோகம் தருவதும் மிக மிக சிறப்பாகும். தடைகள் அகலும். பிரச்சனை தீரும். உடல் நலம் சீராகும். தடைப் பட்ட காரியம் தடையின்றி நடக்கும். குழந்தை பாக்யம் ஏற்படும். 6ல் உள்ள ராகு பகைவரை பந்தாடுவார்கள். ஏற்றமான வாழ்க்கைஉண்டு. உயர் கல்விக்காக சிலர் வெளிநாடு செல்வார்கள்.
செவ்வாய் ஆட்சி பெற்றதும் 1, 2ம் அதபதி சனிபகவான் ஆட்சி பெற்று நீச்ச பங்க ராஜயோகம் தருகிறார். உயர்வு சிறப்பாக இருக்கும். குழந்தையின் உடல் நலத்தில் அக்கரை தேவை. குருபார்வை உள்ளதால் கஷ்டம் இல்லை. ஏற்றம் மாற்றம் முன்னேற்றம் ஏற்படும். வீடு, நிலம் வாங்கும் யோகம் உள்ளது. சிலருக்கு இடம் மாற்றம் ஏற்படும்.
ராசி அதிபதி ஆட்சி பெற்றதும், 3, 10ம் அதிபதி ஆட்சி பெற்றதும் சிறப்பாகும். 2, 11ம் அதிபதி குருபகவான் நீச்சம் பெற்று நீச்ச பங்க ராஜ யோகம் தருகிறார். உத்யோகத்தில் இருந்த சிரம நிலை மாறும். சிலர் விரும்பிய இடம் மாற்றம் ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டில் உத்யோக ரீதியாக இடம் மாற வாய்ப்பு உள்ளது. மனைவி உடல் நலம் சீராகும். தாயாரின் உடல் நலத்தில் அக்கறை தேவை.
செவ்வாய் ஆட்சி பெற்றதும் 11, 12ஆம் அதிபதி ஆட்சி பெற்றதும், ராசி நாதன் நீச்சம் பெற்று நீச்ச பங்க ராஜ யோகம் பெற்றதும் சிறப்பாகும். உத்யோக ரீதியான தலைவலி போகும். நல்ல இடம் மாற்றம் ஏற்படும். சிலருக்கு நல்ல வீடு மாற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்களுடன் கருத்து ஒற்றுமை அவசியம் தேவை. வாக்கு வாதம் வேண்டாம்.