logo
home ஆன்மீகம் ஜூன் 05, 2016
கர்ம வினைகளால் அவதிப்படுகிறீர்களா? கர்மவினைகளை தீர்க்கும் தானங்களும் அவற்றின் வகைகளும்
article image

நிறம்

அன்னதானம் செய்தால்: 

பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீரும் . பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். 

ஆடைதானம் செய்தால்:

தகாத உறவுக் குற்றங்கள் நீங்கும். பெண்களின் கற்பிற்கு ரட்சையாக இருக்கும். 


காலணி தானம்:

பெரியோர்களை நிந்தித்த பாவம் விலகும்.தீர்த்த யாத்திரை செய்த பலன் கிடைக்கும். 


மாங்கல்ய தானம்: 

காமக் குற்றங்கள் அகலும். தீர்க்க மாங்கல்ய பாக்யம் உண்டாகும் . 

குடை தானம்: 

தவறான வழியில் சேர்த்த செல்வத்தினால் ஏற்பட்ட பாவம் விலகும். குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டாகும். 


பாய் தானம்: 

பெற்றவர்களை பெரியவர்களை புறக்கணித்ததால் வந்த சாபங்கள் தீரும்.  கடும் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும். அமைதியான மரணம் ஏற்படும் . 

பசு தானம்: 

இல்லத்தின் தோஷங்கள் விலகும். பலவித பூஜைகளின் பலன்கள் கிடைக்கும். 

பழங்கள் தானம்: 

பல ஜீவன்களை வதைத்த சாபம் தீரும். ஆயுள் விருத்தியாகும். 

காய்கறிகள் தானம்:

பித்ரு சாபங்கள் விலகும் . குழந்தைகளின் ஆரோக்யம் வளரும். 

அரிசி தானம்:

பிறருக்கு ஒன்றுமே தராமல் தனித்து வாழ்ந்த சாபம் தீரும். வறுமை தீரும். 

எண்ணெய் தானம்: 

நாம் அறிந்தும் அறியாமலும் செய்த கர்ம வினைகள் அகலும் .கடன்கள் குறையும். 

பூ தானம்: 

அந்தஸ்து காரணமாக பிறரை அவமதித்ததால் ஏற்படும் தீவினைகள் நீங்கும். குடும்ப வாழ்க்கை சுகமாகவும் , சாந்தமாகவும் அமையும். 

பொன் மாங்கல்யம் தானம்: 

மாங்கல்ய தோஷங்கள் நீங்கும். திருமண தடங்கல்கள் நீங்கும் . 
 
மேலும் நமக்கு பயன்படாத, மற்றவருக்கு பயன்படும் பொருட்கள் எதுவாகினும் தானம் கொடுக்கலாம், மற்றவர் கேட்டு கொடுப்பதைக் காட்டிலும் அவர்களுக்கு அப்பொருள் கண்டிப்பாக தேவைப்படும் என்பதை அறிந்து நாமே அவர்களுக்கு கொடுப்பது இன்னும் பலன்களை அதிகரிக்கச் செய்யும்.