
சைவ - வைணவத்தில், விரத முறை பல வகையில் பலன் தரக்கூடியதாக அமையும் அந்த வகையில் சிவபெருமானுக்காகச் சைவர்கள் எட்டு வகையான விரதங்களை இருந்து வழிபாடு செய்கின்றார்கள். இவ்விரதங்கள் மூலம் சிவனின் பரிபூரண அருளினை பெற இயலும் என்று சைவர்கள் நம்புகின்றார்கள். 1. சோமவார விரதம் - திங்கள்கிழமைகளில் இருப்பது 2. உமா மகேஸ்வர விரதம் - கார்த்திகை பவுர்ணமியில் இருப்பது 3. திருவாதிரை விரதம் - மார்கழி மாதத்தில் வருவது 4. சிவராத்திரி விரதம் - மாசி மாதம் அமாவாசை தினத்தில் வருவது 5. கல்யாண விரதம் - பங்குனி உத்திரத்தன்று கடைபிடிப்பது 6. பாசுபத விரதம் - தைப்பூச தினத்தில் வருவது 7. அஷ்டமி விரதம் - வைகாசி மாதத்தில பூர்வபட்ச அஷ்டமி தினத்தில் அனுஷ்டிப்பது 8. கேதார கவுரி விரதம் - ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி தினத்தில்) இருக்கும் விரதம்.