logo
home ஆன்மீகம் மார்ச் 02, 2016
திருவண்ணாமலையில் எந்தகிழமை கிரிவலம் வந்தால் என்ன பலன்? கிரிவலத்தின்போது தரிசிக்க வேண்டிய முறைகளும்
article image

நிறம்

எமலிங்கத்தின் வாசலில் நின்று அண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இதற்கு ஒளதும்பர தரிசனம் என்றுபெயர். இந்த தரிசனம், நமக்குக் கிடைக்கும் மாபெரும் செல்வத்தை நன்முறையில் பயன்படுத்துவதற் கான தீர்க்காயுளைப் பெறவைக்கும். அப்படிப் பெற்றப்பின்னர், கிரிவலத்தைத் தொடரவேண்டும். கிரிவலப்பாதையில் செங்கம்சாலையிலிருந்து வலது புறம் திரும்பியதும் அண்ணாமலையை தரிசிக்க வேண்டும்.இப்படிதரிசனம் செய்வதற்கு பரஞ்ஜோதி திருமுகதரிசனம் என்று பெயர். இந்த தரிசனம் செய்யும்போதே நமக்கு தகுதியிருந்தால், பலவிதமான சூட்சும காட்சிகளைக் காணமுடியும். குபேரலிங்கத்தின் வாசலிலிருந்து திருவண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இதற்கு வைவஸ்வத லிங்கமுகதரிசனம் என்று பெயர். அஷ்டமுக திக்கு தரிசனங்களில் இது மிகவும் முக்கியமான தரிசனம் ஆகும். தொடர்ந்து வந்து, பூதநாராயணப் பெருமாளிடம் கிரிவலத்தை முடிக்க வேண்டும். பூதநாராயணப் பெருமாளிடம் நமதுப் பொருளாதாரப் பிரார்த்தனைகளை வைக்க வேண்டும்.இங்கிருந்தும், திருவண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இந்த தரிசனத்திற்கு சத்தியநாராயண தரிசனம் என்றுபெயர். கிரிவல பலன்கள்: ஒவ்வொரு கிழமையும் வலம் வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.நம்முடைய பாவங்கள் தொலைய ஒரே வழி கிரிவலம்தான். ஞாயிறு - உடல் பிணி போகும். சிவகதி கிடைக்கும் திங்கள் - நிறைய ஆற்றல் கிடைக்கும். செவ்வாய் - வறுமை நீங்கும், பிறவிப் பிணி நீங்கும். புதன் - எல்லா வித்தைகளிலும் மேம்பாடு அடையலாம். வியாழன் - ஞானம் கூடும். வெள்ளி - விஷ்ணு பதம் பெறலாம். சனி - நவக்கிரகங்கள் கொடுக்கும் நற்பலன் அடைவார்கள்.