logo
home ஆன்மீகம் ஏப்ரல் 05, 2016
இருதயம் நோயிலிருந்து காக்கவும். தீய எண்ணம், கவலை நீங்கவும், மாணவர் திறமையாகப் படிக்கவும் உதவும் காயத்ரி மந்திரம்
article image

நிறம்

படிப்பு, உடல் தூய்மை, மனத்தூய்மையை தரும் காயத்திரி மந்திரத்தின் அரிய பெரும் சிறப்புகள்! மற்றும் அதிசயங்கள் காயத்ரி மந்திரத்தினைப் பற்றி சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் பொழுது, ‘மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். ஜேபிஎஸ் ஹால்டேன் என்ற பிரபல விஞ்ஞானி (1892-1964) காயத்ரி மந்திரத்தினைப் பற்றி குறிப்பிடும் பொழுது காயத்ரி மந்திரம் ஒவ்வொரு இரசாயன கூடங்களின் வாயில் கதவிலும் காயத்ரி மந்திரம் பொறிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் ‘நதிகளில் நான் கங்கையாகவும், மலைகளில் நான் விந்திய மலையாகவும், மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாகவும் இருக்கின்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். சுவாமி இராம கிருஷ்ண பரமஹம்சர் கூறுகையில் ‘பெரிய பெரிய கடுந்தவ முயற்சிகளில் மனிதர்கள் ஈடுபடுவதனைக் காட்டிலும், காயத்ரி மந்திரத்தினை ஜபிப்பது மிகப்பெரிய சாதனையாகும். இது மிக சிறிய மந்திரம்தான். ஆனால், மிக மிக சக்தி வாய்ந்தது எனக் குறிப்பிட்டுள்ளார். காஞ்சி பெரியவர் காயத்ரி ஒரு சிறந்த மனத் தூய்மைக்கான அருமருந்து என்கிறார். ஸ்ரீ சத்ய சாயி பாபா "ஒரு நாளைக்கு குறைந்தது 3 முறையாவது கூறுங்கள். குறிப்பாக குளிக்கும் போது கட்டாயம் கூறுங்கள். அப்போது உடல் தூய்மையுடன் மனத்தூய்மையும் ஏற்படும்" என்கிறார். பிரபல மேலை நாட்டு ஞானி ஆர்தர் கொயெஸ்ட்லர் ‘காயத்ரி மந்திரம் 1000 ஆட்டம் பாம்களுக்குச் சமம்’ எனக் குறிப் பிட்டுள்ளார். ஜெர்மன் தத்துவ ஞானி மெக்ஸ் முல்லர் (1823-1900) அவர்கள் ‘ஒளியினை தவம் செய்து நம் மூளை, மனதினை உயர்த்துவோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். மகாத்மா காந்தி (1869-1948) அவர்கள் ‘யார் ஒருவர் காயத்ரி மந்திரத்தினை ஜபிக் கின்றாரோ அவன் நோய்க்கு ஆளாக மாட்டார்’ எனக் குறிப்பிட்டுள்ளார். காயத்ரி மந்திரத்தினை சொல்லுவதன் பொருள் ‘உயர் அறிவு சக்தியினை அளித்து, அறியாமையை நீக்க வேண்டும்’ என்பதாகும். இம்மந்திரம் சொல்லப்படும் பொழுது எழும் அதிர்வுகள் உடலில் 24 சுரப்பிகளை ஊக்குவிக்கின்றது. இதன் காரணமாக 24 வகை சக்திகள் உடலில் உண்டாகின்றன. காயத்ரி மந்திரத்திற்கு ஜாதி, மதம் என்ற எந்த பிரிவும் கிடையாது. தத் - வெற்றி ச - வீரம் வி - பராமரிப்பு து - நன்மை வ - ஒற்றுமை ரி - அன்பு நி - பணம் யம் - அறிவு ஃபர் - பாதுகாப்பு க்கோ - ஞானம் த்தி - அழுத்தம் வா - பக்தி ஸ்யா - நினைவாற்றல் ஃத்தி - மூச்சு மா - சுய ஒழுக்கம் யோ- விழிப்புணர்வு யோ- உருவாக்குதல் நஹ- இனிமை பரா- நல்லது சோ- தைரியம் த்தா- ஞானம் யட் - சேவை வேதத்திலிருந்து வந்த அனைவருக்கும் பொதுவான மந்திரம் தான் காயத்ரி மந்திரம். ஓம் - தெய்வீக சக்தி, ஒலி சின்னம் ப்பூ - உடல் விமானம் புவஹா - நிழலிடா விமானம் ஸ்வ - வான விமானம் தத் - அந்த தலை தெய்வத்தின் ஸவித்து - பிரபஞ்சம் தயையும் சக்தி வரேன்யம் - வணங்க வேண்டும் பர்கோ - பிரபல தேவஸ்ய - பிரகாசமிக்க தீமஹி - நம் த்யானம் தியோ - அறிவினை யா - யார் நஹ - எங்கள் ப்ரசோதயாத் - தெளிவுப்படுத்துங்கள் ஓம் பூர் : புவ : ஸீவ : தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ : யோந: ப்ரசோதயாத் நம் புத்தியை இயங்கச் செய்யும் பரமாத் மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். இம் மந்திரம் ரிஷி விஸ்வாமித்திரரால் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய பகவானை நோக்கி வழிபடுவதாக இம் மந்திரம் அமைந்துள்ளது. மிக அதிக சக்தி கொண்டது. அதிர்வுகள் மூலம் ஆக்கப்பூர்வ சக்தியினை ஏற்படுத்துவது. வேதங்களின் தாய் தான் காயத்ரி தேவி. இம் மந்திரம் சொல்லப்படும் இடங்களில் எல்லாம் இத்தேவி இருப்பாள். இத் தேவிக்கு சாவித்திரி, சரஸ்வதி என்ற பெயரும் உண்டு. காயத்ரி ஐம்புலன்களின் அதிபதி. சாவித்திரி ப்ராண சக்தி. சாவித்திரி என்பது உண்மையைக் குறிக்கின்றது. சரஸ்வதி வாக்கின் அதிபதி. ஆக, உண்மையான சிந்தனை, சொல், செயல் இவற்றினை குறிப்பதாக அமைகின்றது. காயத்ரி மந்திரம் வேதத்தின் சாரம். இதனை முழு கவனத்தோடே சொல்ல வேண்டும். காலை, மாலை இருவேளையும் சொல்லலாம். அனைவரும் சொல்லலாம். இருதயம் சுத்தமாகும். தீய எண்ணங்கள், கவலைகள் நீங்கும். குறிப்பாக, பள்ளி மாணவர் திறமையாகப் படிப்பார்கள்.