logo
home ஆன்மீகம் நவம்பர் 22, 2017
அதி அற்புதம் வாய்ந்த வெள்ளெருக்கு விநாயகர், வீட்டில் வைப்பது நன்மை தரும்
article image

நிறம்

எருக்கஞ்செடி குடும்பத்தைச் சேர்ந் தது வெள்ளெருக்கு. நீல எருக்கு, ராம எருக்கு என ஒன்பது வகையான எருக்குகள் இருக்கின்றன எருக்கஞ்செடி 12 ஆண்டுகள் மழை இல்லாமல் இருந்தாலும் கூட, சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை கிரகித்து வளரும் தன்மை கொண்டது.அதன் பருவகாலத்தில் பூத்து,காய்த்து,வளர்ந்துவிடும்.இதில் விஷேச அம்சம் கொண்டதுதான் வெள்ளெருக்கு. இதை வீட்டிலும் வளர்க்கலாம். இதன் பூவை வைத்து விநாயகருக்கும், சிவனுக்கும் அர்ச்சனை செய்யலாம். வெள்ளெருக்கம் பூ சங்கை பஸ்மமாக்கப் பயன்படுகிறது.வெள்ளெருக்கு பட்டையை நூலுக்குப் பதில் விளக்குத்திரியாக போட்டு வீட்டில் எரிக்க சகல துர்சக்திகளும் விலகி ஓடும்.வெள்ளெருக்கு வேரில் மணிமாலை செய்யலாம். விநாயகர் செய்து வழிபடலாம்.ஆகர்ஷணம் எட்டு வகைப்படும். இதில் தன ஆகர்ஷணம் பண வரவை அள்ளிக் கொடுக்கக் கூடியது இந்த வெள்ளெருக்கு விநாயகர். வெள்ளெருக்கு விநாயகர் என பல இடங்களில் விற்பனை செய்கிறார்கள். வேர்ப் பகுதிக்கு பதில் தண்டுப்பகுதியில் விநாயகர் செய்து விற்கிறார்கள். ஆனால் அது விரைவில் உளுத்துப்போய் உதிர்ந்துவிடுகிறது. நம்பிக்கைக்குரிய சித்த வைத்தியர் மூலமாக வெள்ளெருக்கு செடியை அடையாளம் கண்டு, அதன் வேரை எடுத்து ஆசாரியை வைத்து வெள்ளெருக்கு விநாயகர் செய்து கொள்ளலாம். வெள்ளிக்கிழமை, ராகு காலத்தில், வெள்ளெருக்கு விநாயகருக்கு, அரைத்த மஞ்சள் கலவையைத் தடவவும். அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை, ராகு காலத்தில் சந்தனம் அரைத்த கலவையை அதன்மேல் தடவி, நிழலில் காய வைத்தால் எருக்கன் விநாயகரில் உள்ள கதிர்வீச்சுக்கள் கட்டுப்படுத்தப்பட்டு, நன்மையான கதிர்கள் நம் வீட்டில் பரவும். இவ்வாறு செய்தபின், அவரவர் இஷ்டம் போல வழிபாடு செய்யலாம்; தூப தீப நைவேத்தியம் செய்யலாம்; ஸ்ரீ சொர்ணகணபதி மந்திரம் சொல்லி, வெள்ளெருக்கு விநாயகரை வழிபட்டால், தன ஆகர்ஷணம் உண்டாகும். வெள்ளெருக்கு (வெ‌ள்ளை எரு‌க்கு) வேரில் உருவான விநாயகரே மிகவும் சக்தி வாய்ந்தவர். பொதுவாக வெள்ளெருக்குச் செடிக்கு தனி சக்தி உண்டு. வெள்ளெருக்கு தேவ மூலிகை அல்லது விருட்சம் என்றும் கூறலாம். அரிதான பொருள் இருக்கும் இடத்தில்தான் வெள்ளெருக்கு செடி முளைக்கும் என சங்க கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதையல், ரத்தினங்கள், சிலைகள் பதுக்கி வைத்திருக்கும் இடம் போன்றவற்றில் மட்டுமே வெள்ளெருக்கு முளைக்கும் என விருட்ச சாஸ்திர நூல்களில் கூறப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தோமேயானால் வெள்ளெருக்கு இருக்கும் இடத்தில் தெய்வீக சக்தி இருக்கிறது என்று அர்த்தம். ஆனால், அதேவேளையில் அங்கு தீய சக்திகளும் எருக்கன் செடியை ஆக்கிரமிக்கவும் வாய்ப்பும் இருக்கிறது. “வெள்ளருக்கு பூக்குமே வேதாளம் பாயுமே” என்ற பாடலும் சங்க காலத்தில் பிரபலம். எனவே வெள்ளெருக்கு செடி எதற்கு அருகில் வளர்ந்துள்ளது என்றும் பார்க்க வேண்டும். தீய சக்தி உள்ள இடத்தில் இருக்கும் வெள்ளருக்கு செடியின் வேரைக் கொண்டு விநாயகரை உருவாக்கக் கூடாது. எனவேதான் வெள்ளெருக்கு வேரை எடுக்கும் முன்பாக வேப்பிலை, கூழாங்கற்கள், மா இலை, வில்வ இலை ஆகியவற்றை மாலை போல் கோர்த்து அந்த வெள்ளெருக்கு செடியை சுற்றி காப்புக்கட்டி, ஒருவாரம் கழித்த பின்னரே வெள்ளெருக்கு வேரை எடுத்து அதனை பதப்படுத்தி விநாயகர் உருவம் செய்ய வேண்டும். வெள்ளெருக்கு செடிக்கு உயிர்ப்பு சக்தி உள்ளதால், அதனைக் பார்த்தவுடன் வெட்டிவிடாமல் மேற்கூறிய பரிகார முறைகளை கடைப்பிடித்த பின் அதை வெட்டி அதன்மூலம் செய்யப்படும் விநாயகர் உருவத்திற்கு சிறப்பான பலன்கள் உண்டு. வீடுகளில் இந்த வெள்ளெருக்கு விநாயரை வைத்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.