logo
home மருத்துவம் மே 15, 2016
எண்ணெய் தேய்த்து குளியுங்கள், நோய் தொற்றிலிருந்து விடுபட்டு நீண்ட ஆயுளுடன் வாழ முன்னோர் காட்டிய சிறந்த வழிமுறை
article image

நிறம்

விரத நாட்கள், நோன்பு நாட்கள் தவிர எல்லா நாட்களிலும் எண்ணை தேய்த்து குளித்தல் அவசியம் என்று விதிக்கப்பட்டுள்ளது. இதயத்தூயமையுடன் உடல் தூய்மையும் மிக முக்கியமாக நம் மூதாதையர் கடை பிடித்திருந்தனர். நம் நாட்டில் காலை கடமைகளில் எண்ணை பூசிக்குளித்தல் முக்கியமான இடம் பெற்றுள்ளது. அடி முதல் முடிவரை நன்றாக எண்ணை தேய்த்து மூழ்கி குளிப்பது நம் முன்னோர்கள் சுவர்க்க சுகமாக கருதினர். ஆனால் எண்ணை தேய்த்து குளிப்பதில் வேறு நன்மைகள் எதுவும் உள்ளதாக என்று பலருக்கு தெரியவில்லை. உடலுக்கு மேலாக கிடைக்க பெரும் சுக அனுபவத்தை எண்ணி எண்ணை தேய்த்து குளிக்கின்றனர். இதை விட மென்மையான இரண்டு விஷயங்கள் பெரும் பயனளிக்கின்றது. ஒன்றாவதாக எண்ணையில் சேர்க்கப்படும் மூலிகைகளின் மருத்துவ குணங்கள் உடம்பில் பரவுகின்றன. மேலும் முக்கியமாக, சருமத்தில் மேல் பரப்பில் வாழும் கண்ணுக்கு தெரியாத நோயணுக்கள், எண்ணை பூசியதும் வாயு கிடைக்க பெறாமல் இறந்து விடுகின்றன. இதனால் உடல் பொலிவும், ஆரோக்கியமும் கிடைக்கும், நோய் தொற்றுக்கள் அழிவதால் நீண்ட ஆயுளும் கிடைக்கும். குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் www. aanmeegamalr.com எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com