logo
home மருத்துவம் ஆகஸ்ட் 27, 2016
உடல் உறுப்புகளுக்கு கட்டளையிடும் தலைமைப் பொறுப்புள்ள மூளையை பாதுகாக்க எளிமையான வழிமுறைகள்
article image

நிறம்

உடலில் உள்ள பாகங்கள் அனைத்தும் வேலை செய்ய கட்டளை இடுவது மூளை என்னும் ஒரு சிறிய நரம்பு மண்டலமே. உடல் உறுப்புகள் அனைத்தையும் பாதுகாக்க, இந்த உறுப்பு இந்த வேலையை செய்ய வேண்டும் என்று அவசரக் கட்டளையிடும் தன்மை மூளைக்கு உண்டு. கண்ணில் தூசி விழும் என்ற சூழலில் இமைகளை மூடவைத்து கண்ணை பாதுகாக்க கட்டளையிடுவது மூளையே... 
இவ்வாறான தலைமைப் பொறுப்பை அழகாக செய்து வரும் மூளையை நாம் மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கவேண்டும்.
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும், தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் மூளையின் செயல்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் எனவே காலை உணவை தவிர்க்க கூடாது.
2.மிக அதிகமாகச் சாப்பிடுவது, மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். எனவே மிதமான உணவை உட்கொள்வது அவசியம்.
3. புகை பிடிக்கும் பழக்கத்தால் மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
4. சர்க்கரை உணவில் அதிகம் சேர்ந்தால் நமது உடலில் புரோட்டின் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
5. மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.
6. நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
7. தூங்கும்போது தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
10. பேசாமல் இருப்பது அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் 
தினமும் புத்தம் புதிய செய்திகளுடன் வெளிவரும் ஒரே ஆன்மிக இணையதளம் 
                                            
www. aanmeegamalar.com 
எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com