logo
home ஆன்மீகம் ஏப்ரல் 16, 2016
பழனி முருகப்பெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகமும், எட்டு வகை அலங்காரமும்
article image

நிறம்

முருகப் பெருமானின் நவ பாஷாண திருமேனி ஆண்டிக் கோலத்தில் தண்டத்தை தாங்கிய திரு உருவமாக உள்ளது. போகர் பெருமான் தான் வடித்த விக்ரகம் மனிதகுல சமுதாயம் தொடர்ந்து பயன்பெற வேண்டுமென்ற நோக்கில் பழனி மலையில் பிரதிஷ்ட்டை செய்தார்.இத்திரு உருவச் சிலையில் அபிஷேகம் செய்கின்ற விபூதி,சந்தனம்,பன்னீர்,தேன்,பஞ்சாமிர்தம்,சிலையின் "நவபாஷாண கட்டு மருந்தின்"சத்தைப் பெற்று பிரசாதமாக மாறுகின்றது.இதனை உட்கொள்வதால் உடலில் உள்ள நாட்பட்ட கொடிய நோய்களையும் போக்குகின்றது. இப்படி ஆயிரக்கணக்கான வருடங்களாக மக்களை கொடிய பிணிகளில் இருந்து மீட்டு வந்த தண்டாயுதபாணி நவபாஷாண திருமேனியின் பல இடங்களில் சிதிலம் அடைந்து விட்டதால் இப்போது அபிஷேகங்கள் முன்பு போல் செய்வதில்லை. இப்போது தேவஸ்தானம் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் கலப்படமில்லா (ஒரிஜினல்)பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகின்றது. நவ பாஷாண தண்டாயுதபாணி முருகனுக்கு ஆறு கால பூசை - பதினாறு வித அபிஷேகம் - எட்டு வித வேடம் - 1. சாது, 2. சன்னியாசி, 3. வேடர், 4. விருத்தர், 5. சண்முகர், 6. சுப்பிரமணியர், 7. வேதியர், 8. இராஜ அலங்காரம், என எட்டு வித அலங்காரம் செய்யப்படுகின்றது. நவபாஷாண முருகனின் திருமேனியில் இராக்கால பூசையின் போது சந்தனக் கட்டையை அரைத்து சிரசில் வைத்து விடுவர். அதிகாலை "விழா பூசை"யின் போது "கவ்பீன தீர்த்தம்"மற்றும் சிரசில் வைத்த சந்தனமும் வழங்குவர்.இது ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும்.இதனைப் பெறுபவர் வாழ்வில் அனைத்து துன்பங்களும் நீங்கி,சந்தோசமும்,மிகப்பெரிய பொருளாதார முன்னேற்றமும் பெறுகின்றனர்.