logo
home ஆன்மீகம் ஏப்ரல் 05, 2016
ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு பலனை கொடுக்கும் அதிசயமிகு ருத்ராட்சம்
article image

நிறம்

மூன்று, ஐந்து, மற்றும் பன்னிரெண்டு முக ருத்திராக்ஷும் சேர்த்து அணியலாம். இரத்த கொதிப்பு, சக்கரை நோய், இருதய நோய்களுக்கு இந்த ருத்ராக்ஷங்கள் நல்ல தீர்வு. சதா உடல் வலியுடன் உள்ளவர்கள் ஏழு முகம் அணியலாம் குழந்தையின்மைக்கு ஆறு, பதிமூன்று மற்றும் 'கௌரி ஷங்கர்' சேர்த்து அணிய வேண்டும். மனக்கவலைகள் மற்றும் இனம் தெரியாத பயம் அகல மூன்று,ஒன்பது மற்றும் பத்து சேர்த்து அணியலாம். மனோவியாதி, பைத்தியம் போன்ற எல்லா வித மன நோய்களுக்கும் நான்கு, ஒன்று மற்றும் ஆறு முகம் சிறந்தது. ஒன்று, இரண்டு, ஐந்து, பதிநான்கு மற்றும் 'கௌரி ஷங்கர்' சேர்த்து அணிய சிவ பக்தி கை கூடும். வழக்குகளில் வெற்றி பெற, எதிரியை வெல்ல பத்து,பதினாரு மற்றும் பத்தொன்பது முகம் சேர்த்து அணிய வேண்டும்.