logo
home ஆன்மீகம் பிப்ரவரி 28, 2016
அனைத்து சோகங்களையும் அழிக்கும் அன்னை வராகி மந்திர ஜபம்!
article image

நிறம்

தேய்பிறை பஞ்சமி திதி இருக்கும் நாள்! இரவு 9 மணி முதல் 10 மணி வரை அன்னை அரசாலை(வராகி)யை நமது வீட்டில் இருக்கும் பூஜையறையில் மந்திர ஜபத்தால் வழிபடலாம்;பூஜையறை இல்லாதவர்கள் வீட்டில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்த நிலையில் பின்வரும் 12 பெயர்களை 15 நிமிடம் வரை ஜபிக்கலாம்; தரையில் அமர்ந்து ஜபித்தால்,ஜபித்தமைக்கான புண்ணியம் நமது உடலுக்குள் பதியாமல்,பூமிக்குள் போய்விடும்;அதனால் தான் மஞ்சள் துண்டு அல்லது பச்சைத் துண்டின் மீது அமர்ந்து ஜபிக்க வேண்டும். அன்னை அரசாலை(வராகி)க்கு பிடித்தமான நிறம் பச்சை! பச்சை நிறத் துண்டின் மீது அமர்ந்து ஒரு இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி(கிழக்கு நோக்கி ஏற்றினால் வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்;வடக்கு நோக்கி ஏற்றினால் கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்)வேறு திசைகளில் ஏற்றினால் ஜபத்துக்குரிய பலன் நம்மை வந்து சேராது. பஞ்சமீ தண்டநாதா சங்கேதா சமேஸ்வரீ சமயசங்கேதா வராகி போத்ரிணீ சிவா வார்த்தாளி மகாசேனா ஆக்ஞாசக்ரேஸ்வரீ அரிக்நீ இந்த 12 பெயர்களை ஜபிக்க வேண்டும்;இதுவே அன்னை அரசாலை(வராகி)யைச் சரணடையும் முதல் படி; 16 தேய்பிறை பஞ்சமி நாட்களில் இரவு நேரத்தில் அன்னையை வழிபட்டால்,நமது அனைத்து முற்பிறப்பு சோகங்களும்,கர்மவினைகளும் தீரத் துவங்கும்; 18 வயது நிரம்பிய ஆண்,பெண் யாராக இருந்தாலும்,(அசைவம் சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு) தினமும் 15 நிமிடம் வரை ஜபிக்கலாம்;காலையில் 6 மணிக்குள் 15 நிமிடமும்,மாலை 6 மணிக்கு மேல் இரவு 11 மணிக்குள் உங்களுக்கு வசதிப்படும் எதாவது 15 நிமிடமும் ஜபித்து வரவேண்டும்; தொடர்ந்து ஜபித்து வந்தால் கிடைக்கும் பலன்கள் நம்முடன் பழகியவாறு நமக்குத் துரோகம் செய்து வருபவர்களின் துரோகச்செயல்கள் அழிந்துவிடும்;கூட இருந்தே குழி பறிக்கும் துரோகிகள் நம்மை விட்டு விலகிச் சென்றுவிடுவர்;அதேசமயம்,நம் மீது உண்மையான பாசத்துடன் இருப்பவர்கள் நம்மை நாடி வருவர்;நமக்கு சரியான சமயத்தில் உதவி செய்வர்;நமது முறையான பதவி உயர்வு நம்மைத் தேடி வரும்;நமக்கு வர வேண்டிய அனைத்தும் படிப்படியாக நம்மை வந்து சேரும்; எவ்வளவுக்கெவ்வளவு பரம ரகசியமாக இந்த மந்திர ஜபத்தைச் செய்கிறோமோ,அவ்வளவுக்கவ்வளவு விரைவான பலன் நமக்குக் கிட்டும்; நமக்கு அல்லது நமது ரத்த உறவுகளுக்கு நம்மோடு பழகிக் கொண்டே சூட்சுமக் கெடுதிகள் செய்து இருந்தால்,அது அடுத்த சில மாதங்களுக்குப் பிறகு நம்மை விட்டு ஓடிவிடும்; ஜபிக்க ஆரம்பித்த 3 ஆம் நாளில் இருந்தே நமக்கு அன்னை அரசாலை(வராகி)யின் தெய்வீகப் பாதுகாப்பு கிட்டும்;