logo
home ஆன்மீகம் ஆகஸ்ட் 28, 2024
சிறுவாபுரி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவம்
article image

நிறம்

சிறுவாபுரி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வள்ளி மணவாள பெருமானுக்கு, சென்னை - அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழு சார்பாக 12-ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

சென்னை,செங்குன்றம் அருகே திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ளது.

இக்கோவிலுக்கு தொடர்ந்து ஆறு வாரங்கள் ஏதாவது ஒரு நாளில் வந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வீடு,நிலம்,வேலை வாய்ப்பு,குழந்தை பாக்கியம், திருமணம் உள்ளிட்டவை நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

மேலும்,இங்குள்ள வள்ளி மணவாளப் பெருமானுக்கு, திருமண பிரார்த்தனை வேண்டி வரும் பக்தர்கள்  சாமிக்கு மாலை அணிவித்து அந்த மாலையை  தாங்கள் அணிந்து கொண்டு கோவிலை வலம் வந்தால் திருமண பாக்கியம் கைகூடும் என்பது  நம்பிக்கையாக உள்ளது.

சிறுவாபுரி முருகன் புகழ் பாடும், சென்னை அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழு சார்பில் ஆண்டுதோறும் வள்ளி மணவாளப் பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் செய்து வருகின்றனர்.

வரும் செப்டம்பர் மாதம் 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று 12-ம் ஆண்டாக திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு விநாயகர்,ஆதிமூலவர், அண்ணாமலையார்,உண்ணாமலை அம்மன் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் உள்ளிட்டவை நடைபெறுகிறது.காலை 7 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம்,சிறப்பு அலங்காரம் உள்ளிட்டவை நடைபெறுகிறது.

காலை 9 மணிக்கு வள்ளி மணவாளப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை உள்ளிட்டவை நடைபெறுகிறது.காலை 11 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

மதியம் 12 மணிக்கு கைலாய வாத்தியம் முழங்க சுவாமி பிரகார புறப்பாடு நடைபெறுகிறது.மதியம் 12.30 மணிக்கு அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

 நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சென்னை அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

மேலும், திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொள்ளவும், தகவல்களை தெரிந்து கொள்ளவும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9790957592,9944309651,9444144585.ஆகும்.